பிக்பாஸ் முதல் சீசனில் பாதியில் வந்தாலும் பலரின் கவனத்திற்கு வந்தவர் நடிகை சுஜா வருணி. நிறைய படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்துள்ளார், ஆனால் அவர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை.
இந்த நிகழ்ச்சியே அவர் மக்களிடம் அதிகம் பிரபலம் ஆக உதவியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது நீண்டநாள் காதலர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சுஜா வருணி தனது மகனுக்கு கிறிஸ்துமஸிற்காக அழகாக அலங்காரம் செய்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். புகைப்படத்தை பார்த்தவர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தற்போது இவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.